தீமை கண்டு தீயாய் எழுவோம்!

Wednesday, September 27, 2006

சாமிகள் எல்லோர்க்கும் ஒன்றடா..!

சாமிகள் எல்லோர்க்கும் ஒன்றடா..!
நடுவில் தூதுசென்றிட நீயும் யாரடா? - என்மொழி
தமிழினில் அர்ச்சனை கேட்கத் தயங்கிடும்
சாமியும் ஊரினில் ஏதடா?

சமத்துவம் பேசுதல் தந்திரமோ!-இங்கு
பேதங்கள் இலையென்றோர் மந்திரமோ!
சட்டையின்றி ஓர் சகதியில் வாடிடும் சக
மானிடர் காண்கையில் சங்கடமோ!